FKart PrmotionalBanners

மகராசனம்

மகராசனம்



செய்முறை (நிலை-1):

விரிப்பில் மல்லாந்து படுத்த நிலையில் இரு கைகளையும் சேர்த்து தலைக்கு பின்னால் பிடரியில் வைக்கவும். இரு முழங்கைகளையும் தரையோடு படிய வைத்து, இரு கால்களையும் முழங்கால் அளவு மடக்கி குத்திட்டு வையுங்கள். இரு பாதங்களையும் 2 அடி தூரம் பக்கவாட்டில் அகட்டிவைக்கவும்.

இரு முழங்கால்களும் வலப்பக்கமாக தரையில் படுமாறு பக்கவாட்டில் கொண்டு செல்லுங்கள். அதே சமயத்தில் தலையை இடதுபக்கமாக திருப்பவும். இதேநிலையில் இடுப்பு-புட்டப் பகுதியை வலப்பக்கம் தூக்கக்கூடாது. அடுத்தபடியாக-இதை அப்படியே, இயல்பான சுவாசத்தில் பக்கம் மாற்றி செய்யவும்.

செய்முறை (நிலை-2):

விரிப்பில் குப்புற படுத்த நிலையில் கால்களை ஒன்றோடு ஒன்று சேர்த்து நீட்டவும். இடுப்பு, மார்பை தரையோடு படுமாறு வைத்து முகத்தை நிமிர்த்தி மோவாயை கீழேவையுங்கள். வலதுகையை மடக்கி, இடது தோள் பட்டை- இடதுகையையும் மடக்கி, வலது தோள்பட்டையை தொடவும். இந்த நிலையில் இரு கைகளின் முழங்கையும், முதலையின் வாய் போல சேர்ந்திருக்கவேண்டும். இயல்பான சுவாசத்தில் 15 விநாடிகள் இருந்து பின்பு சாதாரண நிலைக்கு வரவும்.

பயன்கள்:

சிறுநீரக பிரச்சினைகள் அகலும். முதுகுதண்டில் வலி இராது.

Comments

Popular Posts