FKart PrmotionalBanners

இனிய இல்லற வாழ்விற்கு அகத்தியர் கூறும் வழி முறைகள்!


  1. காலையில் எழுந்ததும் சிவ சக்ரத்தை மனதில் நினையுங்கள்.
  2. பல் தேய்க்கும் போது ஆள் காட்டி விரல் உபயோகிக்காதீர்கள்.
  3. ஓம் ஸ்ரீ கோமதி சங்கர நாராயணா என்று மூன்று முறை கூறுங்கள்.
  4. குளித்தபின் உணவு உண்ணுங்கள்.  பைரவர், காகம், பசு இவைகளுக்கு முடிந்த அளவுக்கு உணவு இடுங்கள்.
  5. பணத்தை எப்போதும் இடது மார்பின் பையில் வையுங்கள்.
  6. வாரம் இரண்டு முறை எண்ணை ஸ்நானம் செய்யுங்கள்.  ஆண்கள் - புதன், சனி; பெண்கள் - செவ்வாய், வெள்ளி.
  7. ஞாயிறு, செவ்வாய், வெள்ளி தினங்களில் சவரம் செய்வது, நகம் வெட்டுவது கூடாது.
  8. மாசி, ஆனி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் - தலை முடி வெட்டுவது கூடாது.
  9. பூசை மற்றும் அன்றாட தேவைக்கு மணமுள்ள மலர்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும்.  கனகாம்பரம் போன்ற பூக்களை தவிர்க்கவேண்டும்.
  10. கோயில் கோமுகத்தை - சுத்தம் செய்து, சந்தானம், குங்குமம் இட்டு தீபாராதனை செய்யுங்கள்.
  11. மகம் நட்சத்திரம் அன்று எருமை மாடுகளுக்கு அகத்திக் கீரை கொடுத்து வந்தால் மரண பயம் விலகும்.
  12. பூசை விளக்கு துலக்க வேண்டிய நாட்கள் - ஞாயிறு, வியாழன், சனி
  13. வருடம் ஒருமுறையேனும் கண்டிப்பாக குலதெய்வ பூசை/வழிபாடு செய்யவேண்டும்.
  14. லுங்கி, கைலி அணியாதீர்கள்.  வறுமை வாட்டும்.  வேஷ்டியே நல்லது.  நள மகாராஜா தமயந்தியின் பாதி சேலையை அணிந்த நிகழ்ச்சியே கைலியாக மாறியது.
  15. வெளியே போகும்போது டாட்டா காட்டாதீர்கள்.  இறைநாமம் சொல்லி செல்லுங்கள்.
  16. புது ஆடைகளை குங்குமமிட்டு, வெண் தாமரை வைத்து பூசை செய்தபின் அணியுங்கள்.
  17. அருந்த சுரைக்குடுவை, மூங்கில் அல்லது வெள்ளி டம்பளர் உபயோகிக்கவும்.
  18. மருதாணியை முடிந்த மட்டும் அதிகமாக உபயோகிக்கவும்.
  19. குழந்தைகளை அடிக்காதீர்கள் - வியாதி, கடன், சுமை அதிகரிக்கும்.

Comments

Popular Posts