FKart PrmotionalBanners

ஜீவாமிர்தம் எப்படி பயன்படுத்துவது?

ஜீவாமிர்தம் எப்படி பயன்படுத்துவது?

தெளிப்புக்காக எடுக்கும்போது  கரைசலின் மேற்புறத்தில் இருக்கும் தெளிவை மட்டும் எடுத்து வடிகட்டிப் பயன்படுத்த வேண்டும் .ஒவ்வொரு பயிருக்கும்  குறிப்பிட்ட அளவு வடிகட்டிய ஜீவாமிர்தத்தை  குறிப்பிட்ட அளவு நீரில் கலந்து தெளிக்க வேண்டும் .அதேபோல் காய் பிடிக்கும் சமயத்தில் புளித்தமோர் ,முளைகட்டிய தானியக் கலவை ,தேங்காய்த் தண்ணீர் ஆகியவற்றையும்  தெளிக்க வேண்டும் .இது அனைத்துப் பயிர்களுக்கும் பொருந்தும் .

ஒரு ஏக்கருக்குத் தெளிப்பதற்குத் தேவையான் அளவுகள்


4 மாதப் பயிர்கள் (120 நாட்கள் )


15 -ம் நாளில் 5 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 100 லிட்டர் தண்ணீர்.
30 -
ம் நாளில் 10 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 150  லிட்டர் தண்ணீர்.
60 -
ம் நாளுக்கு மேல்,20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200  லிட்டர் தண்ணீர்.
90 -
ம் நாள் அல்லது வதை பால் பிடிக்கும் தருணத்தில் 5 லிட்டர் புளித்த மொருடன் 200  லிட்டர் தண்ணீர்.


6 மாதப் பயிர்கள் (180 நாட்கள் )


30 -ம் நாளில் 5 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 100  லிட்டர் தண்ணீர்.
60 -
ம் நாளில் 10 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 150  லிட்டர் தண்ணீர்.
90 -
ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200  லிட்டர் தண்ணீர்.
120-
ம் நாளில்  5 லிட்டர் புளித்த மொருடன் 200  லிட்டர் தண்ணீர்.
150 -
ம் நாளில்,10 லிட்டர் முளைகட்டிய தானியக் கரைசலை 30 லிட்டர்   ஜீவாமிர்தத்துடன் 200  லிட்டர் தண்ணீர்.

ஓர் ஆண்டு  பயிர்களுக்கு

30 -
ம்   நாளில் 5 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 100  லிட்டர் தண்ணீர்.
60 -
ம்   நாளில் 10 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 150  லிட்டர் தண்ணீர்.
90 -
ம்   நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200  லிட்டர் தண்ணீர்.
120-
ம்  நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200  லிட்டர் தண்ணீர்.
150 -
ம் நாளில் 5 லிட்டர் புளித்த மொருடன் 200  லிட்டர் தண்ணீர்.
180 -
ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200  லிட்டர் தண்ணீர்.
210 -
ம் நாளில் 2 லிட்டர் தேங்காய்த் தண்ணீருடன் 200  லிட்டர் தண்ணீர்.
240 -
ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200  லிட்டர் தண்ணீர்.
270 -
ம் நாளில் 10 லிட்டர் முளைகட்டிய தானியக் கரைசலை 30 லிட்டர்   ஜீவாமிர்தத்துடன் 200  லிட்டர் தண்ணீர்.
அதன் பிறகு மாதந்தோறும் 30 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200  லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும் .
பழ மரங்களாக இருப்பின் காய்கள் முதிர்ச்சி பெறுவதற்கு  2 மாதங்களுக்கு முன்பு 2 லிட்டர் தேங்காய்த் தண்ணீருடன் 200  லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவும்.

Comments

Popular Posts